யாதும் ஊரே யாவரும் கேளிர்..
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன..
சாதலும் புதுவது அன்றே
வாழ்தல் மகிழ்தென்றும் இலமே..
முனிவின் இன்னாதென்றலும் இலமே..
மின்னொடு வானம் தன் துளி தலையீயானது
கற்பொருது இறங்கும் மல்லல் பேராற்று
நீர்வழி படும் புனை போல ஆருயிர்க்கு
முறைவழி படும் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகையில்
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே..
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே...
-கணியன் பூங்குன்றனார்